Monday, August 9, 2010

அடேங்கப்பா இவ்வளவு வேலைகளா....

சமீப காலமாக எனது அப்பா, அம்மா மற்றும் அத்தையை வழி அனுப்புவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பயணிப்பது வாடிக்கையாக இருந்தது. இதனால் மெட்ரோ ரயிலில் அடிக்கடி பயணம் செய்தேன். ரயிலில் உள்ள கூபேயில் வழக்கம் போல பாண் பராக் மற்றும் வெத்தலையை மென்று, தின்று உமிழ்ந்து இருந்தனர். அதோடு இல்லாமல் ஒரு விளம்பரம் ஒன்றையும் பார்த்தேன்.

நீங்கள் 10th அல்லது 12th படித்தவர்களா 

FULL TIME - Rs 24,000/ p.m
PART TIME - Rs 12,000/ p.m
WEEKENDS - Rs 4,000/ p.m

NO MARKETING / SALES EXECUTIVE JOB

AN INTERNATIONAL COMPANY. ISO 9001 CERTIFIED.

CONTACT: +91 XXXXX-XXXXX / +91 XXXXX-XXXXX

இது தான் அந்த விளம்பரம். இது போல் ரயில் உள்ள அணைத்து குபேயிலும் இது போல் விளம்பரங்கள், தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண் மட்டுமே மாறி இருந்தது. 
ஒரு நிமிடம் திகைத்தேன், இவ்வளவு தேவைகள் இருந்தும் Rs.6000/ p.m வேலைக்காக எனது நண்பர் கம்பெனிக்கு வந்திருந்த விண்ணபன்களோ 1500. 

Friday, August 6, 2010

வாழ்த்துக்கள் "Airtel Super Singer"

எங்கள் வீட்டில் நாங்கள் பார்க்கும் தமிழ் channel பெரும்பாலும் விஜய் டிவி மட்டுமே. ஏனென்றால் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் நேரம் எப்படியும் ஒன்பது மணியாக தான் இருக்கும், அந்த நேரங்களில் மற்ற channel-இல் அழுது புலம்பும் நாடகம் தான் ஓடி கொண்டிருக்கும். சமீபத்தில் "Airtel Super Singer"  சீனியர் நிகழ்ச்சி பார்த்தேன். மாற்று திறனாளி  ஒருவர் தனது கணவருடன் மூன்றாம் கட்ட குரல் தேர்வுக்காக வந்து இருந்தார். 






இருவருமே அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். போட்டிக்கு வந்த பிற போட்டியாளர்கள் பெரும்பாலும் பாடல் வரிகளை தங்களது குறிப்பேடுகளில் இருந்து பார்த்து பாடியபோது இவர்கள் மட்டுமே என்னை மிகவும் கவர்ந்தனர். வழக்கமாக போட்டியாளர்கள் தாங்கள் தேர்ந்து எடுக்கபட்டார்கள் என்பதை பச்சை நிற விளக்கை வைத்து அறிந்துகொள்வார்கள். நான் என் மனைவி  இடம்    இவர்கள் தேர்வானார்கள் என்பதுகூட இவர்களக்கு தெரியாதே என்று சொல்லிகொண்டிருக்கும் வேளையில் மஹதி பாடியவரின் பேரை சொல்லி தாங்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு முன்னேறிவிட்டீர்கள் என்று சொன்னவுடன் எனக்கும் என் மனைவிக்கும் அளவுகடந்த ஒரு மகிழ்ச்சி. இவ்வாறு ஒரு புது முயற்சி செய்ததுற்கு "Airtel Super Singer" குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.



Wednesday, August 4, 2010

எனது இரண்டாவது அத்யாயம்...

நண்பர்களே...

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வலை பதிவிற்கு பிரவேசம் செய்கிறேன்.
வலை உலகின் நண்பர்களே உங்களது கருத்துகள் மற்றும் எண்ணங்கள் என்னை வழி நடத்தி செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

நான் இந்த வலையை பதிவு செய்யும் போது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது "Word Verifcation".  அதில் கொடுக்கப்பட்டு இருந்த எழுத்துக்கள் உங்கள் பார்வைக்கு